29 Aug 2020

பிழைப்புக்காக என்பவரே...


கொல் கொள்

முடியுமானால்

நாய்களைப் புதைத்து விடு

வால்களை வைத்துக் கொள்

*****

பிழைப்புக்காக என்பவரே...

ஒரு கோப்பைத் தேநீரைக்

குளிர்ச்சியாகவும்

ஒரு குவளை மதுவை

சூடாகவும்

எடுத்து வா

குளிர்ச்சிக்காக

தேநீரில் நஞ்சைக் கொட்டு

சூட்டிற்காக

மதுவில் திராவத்தை ஊற்று

உன் கடமையைச் செய்து விட்டாய்

நீ புறப்படு

*****

கடல் போல மனசு

குளத்தங்கரை போதும்

கடற்கரையாய்

பார்த்துக் கொள்ளும் மனம்

*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...