31 Aug 2020

மனம் வளர்ப்பவர்கள்

 


அச்சச்சோ

பெரிய மலை

சிறிய பறவை

அச்சச்சோ

அளந்து விடும் சிறிய பறவை

*****

மனம் வளர்ப்பவர்கள்

மனதை வளர்க்கிறாய்

மலை சிறிதாகிறது

கடல் சிறிதாகிறது

பூமி சிறிதாகிறது

வானம் சிறிதாகிறது

பிரபஞ்சம் சிறிதாகிறது

அதற்கு மேல் சிறிதாவது ஏது

மனம் வளர்வதாகிறது பெரிதாகிறது

பிரபஞ்சத்தின் சிறுபுள்ளி

தானென்பது

மறந்து போகிறது

*****

இரைச்சலின் அமைதி

கரையில் ஓலமிடும்

நீர்தான்

நடுகடலில்

அமைதியாக இருக்கிறது

*****

No comments:

Post a Comment

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...