31 Aug 2020

மனம் வளர்ப்பவர்கள்

 


அச்சச்சோ

பெரிய மலை

சிறிய பறவை

அச்சச்சோ

அளந்து விடும் சிறிய பறவை

*****

மனம் வளர்ப்பவர்கள்

மனதை வளர்க்கிறாய்

மலை சிறிதாகிறது

கடல் சிறிதாகிறது

பூமி சிறிதாகிறது

வானம் சிறிதாகிறது

பிரபஞ்சம் சிறிதாகிறது

அதற்கு மேல் சிறிதாவது ஏது

மனம் வளர்வதாகிறது பெரிதாகிறது

பிரபஞ்சத்தின் சிறுபுள்ளி

தானென்பது

மறந்து போகிறது

*****

இரைச்சலின் அமைதி

கரையில் ஓலமிடும்

நீர்தான்

நடுகடலில்

அமைதியாக இருக்கிறது

*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...