29 Sept 2019

கவலைப்பட்டால் நீயும் ஒரு விவசாயி!


கவலைப்பட்டால் நீயும் ஒரு விவசாயி!
            முதலில் காவிரியில் தண்ணீர் வரவில்லை என்று கவலையாக இருக்கிறது. காவிரியில் தண்ணீர் வந்தும் வெண்ணாற்றில் பாலம் மற்றும் மதகுகள் கட்டும் வேலை முடியவில்லையே என்று கவலையாக இருக்கிறது. அந்த வேலை முடிந்த பிறகுதானே வெண்ணாற்றில் தண்ணீர் விடுகிறார்கள். வெண்ணாற்றில் தண்ணீர் வந்தும் மேல்மடைக்காரன் தண்ணீர் விடுவானா என்று கவலையாக இருக்கிறது. இதெல்லாம் முடிந்த பிற்பாடு நான்கு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை, நான்கே நாளில் பெய்து வெள்ளமாகி விடக் கூடாது என்று கவலையாக இருக்கிறது. இப்படி எதற்கெடுத்தாலும் கவலைதான். என்ன செய்வது? கவலைதானே விவசாயிகளின் வாழ்க்கை. தொழிற்சாலையில் உருவாக்குவது போல பாதுக்காப்பாகவா நெல்மணிகளை விளைவிக்க முடிகிறது? அல்லது இந்த நாளில் ஆரம்பித்து இந்த நாளில் என்று கட்டு செட்டாவாகா முடிக்க முடிகிறது? விதைத்தது, நட்டது வளர்ந்து வரும் நாள் வரை காத்திருந்துதானே அறுவடை பண்ண முடிகிறது!
*****
மந்த நிலையின் சுபிட்ச நிலைகள்
            பொருளாதார மந்தநிலையெல்லாம் நாமாக உருவாக்கிக் கொள்வது என்று நினைக்கிறேன். அப்படி, எப்படி சொல்லி விட முடியும்? என்று நீங்கள் கேட்கலாம். எந்த பொருளாதார மந்த நிலையிலாவது டாஸ்மாக் விற்பனை குறைகிறதா? பீடி, சிகெரட் புகைப்பது குறைகிறதா? போதைப் பாக்குகளின் விற்பனைதான் சரிகிறதா? தின்ன சோறு இல்லை என்றாலும் குடித்து விட்டு வருகிறார்கள். ஊதித் தள்ளி விட்டு வருகிறார்கள். வாய்க்குள் போட்டு மென்று விட்டு வருகிறார்கள். அதற்கு மட்டும் காசு எப்படியோ கிடைத்து விடுகிறது. ஏதோ ஒரு மன வேகம்தானே அப்படி அதை நோக்கி உந்தித் தள்ளுகிறது. அப்படி அதை நோக்கி ஒரு மனவேகம் உந்தித் தள்ளும் போது பொருளாதார மந்தநிலையை நோக்கி ஒரு மனவேகம் ஏன் உந்தித் தள்ளக் கூடாது?
            இதில்...
            நம் மக்கள் இருக்கிறார்களே! குடித்து விட்டு வருபவர்களைப் பார்த்து பயந்து நிற்பார்கள். சுயமாக ஒன்றை முயன்று பார்ப்பவரைப் பயமுறுத்தி விடுவார்கள்! ஏன் இப்படி?
*****

No comments:

Post a Comment

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...