31 Mar 2019

காமராஜர் ஆட்சி & ஓட்டுக்கு நோட்டு


காமராஜர் ஆட்சி & ஓட்டுக்கு நோட்டு
காமராஜர் ஆட்சியை அமைப்போம்! நல்லது! இவ்வளவு பினாமிகளை வைத்துக் கொண்டு எப்படி அமைக்கப் போகிறீர்களோ?! பாவந்தான் நீங்கள்!
*****
நாட்டில் வருமான வரித்துறை இருக்கிறது. பொருளாதாரக் குற்றப்பிரிவு இருக்கிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் கருப்புப் பணம் ஒழிக்கப்பட்டாகி விட்டது என்று சொல்லப்படுகிறது. சோதனைகளின் போது இவ்வளவு பணம் எப்படிதான் பிடிபடுகிறதோ? என்று ஆச்சரியப்பட்டால், "அடப் போங்கம்பி! பிடிபடாத பணம் உங்களுக்குத் தெரியாதம்பி!" என்கிறார்கள் பழம் தின்று கொட்டைப் போட்டதாகச் சொல்லப்படும் ஊரு பெருசுமாருக.
*****
இந்தத் தேர்தலில் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை ரொம்ப கம்மியில்ல. இந்தக் கொழுத்தும் வெயிலில் பெண்கள் பிரச்சாரத்துக்காக அலைந்து கஷ்டப்படக் கூடாது என்று நினைக்கிறார்கள் போலிருக்கிறது.
*****
எவ்வளவு பணம் தந்தா எங்க சின்னத்துக்கு ஓட்டுப் போடுவீங்க? என்று கேட்கிறார்கள். நீங்களே சொல்லுங்கள்! அவர்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்று தெரியாமல் எப்படிக் கேட்பது?
*****
ப்பவே ஓட்டுப் போட உப்புமா போட்டுருக்காங்க. ரெண்டு ரூவா காசுல்லாம் கொடுத்துருக்காங்க. இப்போ பிரியாணி, ஐநூறு ஆயிரம்னு ஆயிடுச்சு. வருங்காலத்துல பீட்சா, பர்க்கரு, ஆன்லைன் பேமேண்ட்னு ஆயிடலாம்!
*****
எல்லா கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் கவனித்தீர்களா! தமிழை அலுவல் மொழியாக்குவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்கள். அது இருக்கட்டும். முடிஞ்சா முதலில் தமிழ்நாட்டில் இருக்கின்ற எல்லா பள்ளிகளிலும் தமிழைப் பாட மொழியாக ஆக்குங்கப்பா!
*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...