28 Feb 2019

ஆரோக்கியக் கவிதை


பெரு வியாதிகளின் மருத்துவச்சி
தெருவோரத்து தோசை விற்கும் பாட்டி
முதியோர் இல்லத்தில் இருக்கிறாளோ
கோயில் முன் பிச்சை ஏந்துகிறாளோ
அனாதையாகி மாநகரில் அலைகிறாளோ
குழந்தைகளைக் காப்பகங்களில் விட்டோர்க்கு
கட்டுச்சோறு கொண்டு செல்லாதோர்க்கு
நேற்று வைத்த மீன் குழம்பில்
பழைய சோறு தின்று அறியாதோர்க்கு
பாஸ்ட் புட்டின் பாலிதீன் உறையில்
பரோட்டாவின் சால்னாவில் நீந்துவோர்க்கு
காசற்றவரின் பசி தீர்த்த
தோசையின் ருசி தெரியாது
தள்ளாடி நடை நடக்கும்
நடுங்கும் கரங்களில் கரண்டி பிடித்து
வட்டம் சிதையாமல் வடித்தெடுக்கும்
அவளை அழைத்து வந்து
ஒரு தோசைச் சுடச் சொல்லிச் சாப்பிடுங்கள்
தின்றால் தீரும் சர்க்கரை வியாதியையும்
உணர்ச்சி வசப்பட்டால் குன்றும் ரத்தக் கொதிப்பையும்
விக்கித்தால் நீங்கும் மாரடைப்பையும்
தின்னத் தின்ன அழியும் கொழுப்பையும்
விசித்திரமாய் சந்திக்கலாம்
பெரு வியாதிகளின் மருத்துவச்சி அவள்
*****

No comments:

Post a Comment

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...