27 Jan 2019

பாலிசிகளால் ஆனது வாழ்க்கை


எனக்கு பத்து வீட்டு புரோக்கரைத் தெரியும் என்றான் நண்பர். அவர் நகரவாசியாகி விட்டார் என்பதைப் புரிந்து கொண்டேன்.
&&&
எதற்கு நண்பா உனக்கு ஆன்மிக குரு? என்றேன். ரொம்ப தெளிவாகக் குழப்புவதற்கு அவர்தான் உதவி செய்வதாக நெகிழ்ந்தவர், நிறைய சம்பாதிச்சாச்சு யார்கிட்டேயாவது கொண்டு போய் கொட்டணும்ல என்று வெடிச் சிரிப்பு சிரித்தார் பாருங்கள். ஓடி வந்து விட்டேன்.
&&&
ஒவ்வொரு முறையும் ஏஜெண்டுகளைப் பார்க்கும் போது புரிகிறது இன்ஷ்யூரன்ஸ் பாலிசிகளால் ஆனது வாழ்க்கை. தொட்ட தொண்ணூறுக்கும் ஒரு பாலிசி இருக்கிறது.
&&&
நான் தொண்ணூறு சதவீதம் கெட்டவன், பத்து சதவீதம் நல்லவன் என்று சொன்ன நண்பர், நீங்கள் எப்படி என்றார்? நூறு சதவீதம் கெட்டவன், ஜீரோ சதவீதம் நல்லவன் என்றேன். இதில் என்ன மெஜாரிட்டியோ, மைனாரிட்டியோ? எலெக்சன் ரிசல்ட் போல பார்க்கிறார்கள்.
&&&
பெரிய பலூனாக இருந்தால் என்ன? சின்ன ஊசியால் குத்தி காலி பண்ணி விடலாம். அப்படித்தான் நடக்கிறது. ராஜமெளலி சார், ஷங்கர் சார் எல்லாம் எவ்வளவு பிரம்மாண்டமாக படம் எடுக்கிறார்கள். நம்ம பய மக்கள் நெட்டில் பார்த்து ரொம்ப அசால்ட்டாகப் போய் விடுகிறார்கள். ஆனால் நெட் என்பது பிரமாண்டம்தான். எவ்வளவு பெரிய பிரமாண்டத்தையும் ரொம்ப சிம்பிளாக காலி பண்ணி விடுகிறது.
*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...