27 Jan 2019

நெட்ல விட்டுடுவேன்...


ஒன்றா? இரண்டா? மர்ம மரணங்கள்!
எல்லாவற்றையும் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்ற வேண்டுகோள்களைப் பார்த்தால் இங்கு சி.பி.ஐ.க்கு தனி பிராஞ்ச்தான் ஆரம்பிக்க வேண்டும்.

&&&
இரத்தக் கொதிப்பு என்று பொது மருத்துவமனைக்கு மாத்திரை வாங்கச் சென்ற தாத்தாவுக்கு மனதில் தோன்றியது, 'கோபப்பட்டால் ரத்தம் சூடாகிறது. ரத்தம் சூடானால் கோபம் உண்டாகிறது.'
இளரத்தம் எப்போதும் சூடாகி விடும் என்றாலும்,
ஹெச்.ஐ.வி. வராமல் நாங்க பார்த்துக்கிறோம். நீங்க ஹெச்.ஐ.வி. இல்லாத ரத்தமா பார்த்து ஏத்துங்கோ! என்று அங்கே நின்று கொண்டிருந்த இளரத்தங்கள் ரத்தம் சூடாகி கோபப்படுவதைப் பார்த்த தாத்தா மாத்திரை வாங்காமலே வந்து விட்டார். தனக்கு அப்படி ரத்தம் கொதிக்கவில்லையே என்ற  ஓர் ஆதங்கம் அவருக்கும் இருக்கிறது.
&&&
நெட்ல விட்டுடுவேன் என்று மிரட்டிக் கொண்டிருந்த ஆண் தோழனிடம், வுட்டுத் தொலைச்சுக்கோ என்று சலித்துப் போய் சொன்னாள் அந்த பெண் ‍தோழி. என்ன ஓர் ஆணவம் என்று விட்டுத் தொலைத்தான் ஆண் தோழன். ஒருவர் கூட பார்க்கவில்லை. ஒரு லைக்ஸ் கூட போடவில்லை. என்ன கொடுமை தோழி பார் என்று கடைசியில் அந்த பெண் தோழியிடமே புலம்பியிருக்கிறான் அந்த ஆண் தோழன்.
*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...