26 Jan 2019

கொலை காண்டுல இருப்பவர்கள்!


கொலை காண்டுல இருப்பவர்கள்!
எய்ட்ஸ் பரவாமல் இருக்க எப்படிப் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் இல்லாத பொது மருத்துவமனைகளைப் பார்க்க முடியுமா?
அதே பொது மருத்துவமனையில் எய்ட்ஸ் நோய்க் கிருமி இருந்த சோதனை செய்யப்படாத ரத்தத்தை கர்ப்பிணிகளுக்கு ஏற்றிய அதிர்ச்சிக்கு அதிர்ச்சி தரும் செய்தியைக் கேள்விபட்ட போது ரத்தமே உறைந்து விடுவது போல் அல்லவா இருந்தது.
இதையும் ஒரு விழிப்புணர்வு வாசகமாக அதே மருத்துமனைச் சுவர்களில் எழுதி வைக்க வேண்டும் போலிருக்கிறது.
அடிதடியில் இறங்கி, அரிவாள் வீசி ரத்தத்தை வெளியேற்றுபவர்கள்தான் கொலை காண்டுல இருக்கிறதா சொல்வார்கள்.
இப்படி உயிர் காக்க ரத்தத்தை ஏற்றுபவர்களும் கொலை காண்டுல இருப்பார்கள் என்பது இப்போதுதான் தெரிகிறது.
ரத்தத்தின் ரத்தங்களாக இருந்தாலும், தான் ஆடா விட்டாலும் சதை ஆடுபவர்களாக இருந்தாலும், Blood is thicker than water என்று மார் தட்டுபவர்களாக இருந்தாலும் ரத்தம் மாறினால் மொத்தமும் மாறி விடுமே.
ரத்தம் சிந்தாத போராட்டம் இல்லை.
இப்படி நோய்க் கிருமிகள் நிரம்பிய ரத்தத்தை ஏற்றுவது நியாயம் இல்லை.
*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...