31 Jan 2019

தரிசனம் முடிந்து விட்டது


தரிசனம் முடிந்து விட்டது
த்தனைப் பொருட்களையும்
வாங்கிக் கேட்கும் குழந்தைக்கு
எதையும் வாங்கித் தராத இயலாமையில்
கோவிலை விட்டு வெளியேறுகிறார் கடவுள்
தரிசனம் வேண்டி உள்ளே சென்று
வெளியேறி விட்டக் கடவுளைக்
கண்டு விட்டத் திருப்தியோடு
திரும்பும் வழியில்
எந்தப் பொருள் எடுத்தாலும்
இரண்டு ரூபாய்க் கடையில்
தான் விரும்பிய பொருள் ஒன்றை
எடுத்துக் கொள்கிறது குழந்தை
செய்தியறிந்து கோவிலுக்குத்  திரும்புகிறார் கடவுள்
தரிசனம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கிறோம் நாம்
*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...