26 Jan 2019

சிஸ்டத்தைச் சரி செய்யலாம்!


சிஸ்டத்தைச் சரி செய்யலாம்!
பொங்கலுக்கு வெளியான படங்களில் வசூலில் முதலிடம் பிடித்த படம் எது? என்று பேட்ட, விஸ்வாஸம் ஆகிய இரு படங்களுக்கும் குடுமிபிடி சண்டை நடக்காத குறைதான் பாக்கி.
நல்லது.
இரண்டு படங்களுமே தங்களின் வசூல் எவ்வளவு என்பதை வெளிப்படையாகக்  காட்டி விட்டால் வசூலில் முதலிடம் பிடித்த படம் எது என்பதை யாரும் சொல்லாமலே எல்லாரும் தெரிந்து கொண்டு விடலாம்.
அத்துடன் வெளிப்படையாக வசூலை அறிவித்து உரிய வரி செலுத்துவதற்கும் அது மிகச் சிறந்த முன்னுதாரணமாக இருக்கும்.
ஹீரோ வில்லன் ஆகும் தமிழ் சினிமாவில் அப்படி ஒரு மாற்றம் மட்டும் நிகழ்ந்து விடுமா என்ன?
அந்த வகையில் சிஸ்டம் சரியில்லாமல்தான் இருக்கிறது. இது சரி செய்ய முடியாத ஒரு சிஸ்டமும் அல்ல.
அவர்களின் ஒவ்வொரு நொடியையும் அவர்களே செதுக்கி அவர்களே சம்பாதிக்கிறார்கள் என்ற எண்ணமும் சம்பந்தப்பட்டவர்களுக்கு இருக்கிறது.
பேட்ட, விஸ்வாஸம் ஆகிய இரண்டு படங்களில் நடித்த கதாநாயகர்களும் தர்மத்தைத் தூக்கிப் பிடிப்பவர்களாக சித்தரிக்கப்படுபவர்கள்.
அவர்களின் படங்களில் வசூலின் வெளிப்படைத்தன்மை வெளியானால் திரையில் மட்டும் இல்லாமல் நிஜத்திலும் அவர்கள் தர்மத்தைத் தூக்கிப் பிடிப்பவர்கள் என்ற நல்ல பெயரும் இதனால் அவர்களுக்குக் கிட்டும்.
கதாநாயகர்களில் யார் பெரியவர் என்று இப்படிக் கூட நிரூபிக்கலாம்.
பொதுவாக வசூலில் கொடி கட்டிப் பறக்கும் கதாநாயகர்கள் நிஜத்தில் வெளிப்படைத் தன்மை என்ற தர்மத்தைத் தூக்கி பிடிப்பதை விட, அதில் இருக்கும் மர்மத்தைக் கட்டிக் காப்பதில் ஆர்வம் மிகுந்தவர்களாக இருப்பதாக ஒரு தோற்றம் இருக்கிறது. அந்தத் தோற்றத்துக்கு இது ஒரு மாற்றமாக, ஏற்றமாக இருக்கும்.
இந்த விசயத்தில்,
அந்த மர்மம் விடுபடாமல் இருப்பதே அவர்களின் தொழில் தர்மம் என்று இருக்கப் போகிறார்களா? அல்லது வசூலின் வெளிப்படைத்தன்மையை உரக்கச் சொல்வதே தர்மம் என்று அதை நிலைநாட்டப் போகிறார்களா? என்பதற்கு முன்னதே பதிலாக இருக்கப் போகிறது என்று நினைக்கிறேன்.
*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...