27 Dec 2018

செங்காந்தள் அறிவுத் திருவிழா - 10


செங்காந்தள் அறிவுத் திருவிழா - 10
செங்காந்தள் அறிவுத் திருவிழா என்பது மாணவர்களுக்கானப் புத்தகக் கண்காட்சியாகும்.
பள்ளிகள்தோறும் நடைபெறும் இப்புத்தகக் கண்காட்சி புத்தக ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் பொது வெளிகளிலும் நடத்தப்படுவதுண்டு. அவ்வகையில் 25.12.2018 அன்று கச்சனம், ஏ.வி.வணிக வளாகத்தில் கலைநிலவு கட்டடக் கலை வரைகலை மையத்தால் நடத்தப்பட்ட கட்டடக்கலைக் கண்காட்சியில் செங்காந்தளின் பத்தாவது அறிவுத்திருவிழா அனைவருக்குமானப் புத்தகக் கண்காட்சியாக நடத்தப்பட்டது.
ஒரு கட்டடக்கலைக் கண்காட்சியில் நடத்தப்பட்ட முதல் அறிவுத்திருவிழா இதுவேயாகும். புத்தகக் கண்காட்சியோடு மூலிகைக் கண்காட்சியும், ஓவியக் கண்காட்சியும் இணைந்த அரங்காக அறிவுத் திருவிழா அரங்கு அமைக்கப்பட்டிருந்தது.
மூலிகைக் கண்காட்சியைச் செங்காந்தள் ஏற்பாடு செய்ய, ஓவியக் கண்காட்சிக்கான ஓவியங்களை செங்காந்தளின் அங்கங்களில் ஒருவரான திருநெய்ப்பேறு ஓவியர் கலைவாணன் அவர்கள் வரைந்திருந்தார்.
2018 ஆம் ஆண்டான இவ்வாண்டில் நவம்பர் மாதத்தில் கஜா புயலின் கோரத் தாண்டவத்தால் செங்காந்தளின் அறிவுத் திருவிழா நடத்த இயலாமல் போனது. அதன் தாக்கம் காரணமாக அதே நிலை டிசம்பர் மாதத்துக்கும் ஏற்பட்டு விடுமோ என  ஐயுற்று இருந்த வேளையில் கஜா புயலிலிருந்து மீட்டுருவாக்கம் செய்யும் வகையில் கலைநிலவு கட்டடக் கலை வரைகலை மையம் ஏற்பாடு செய்திருந்து கட்டடக் கலை கண்காட்சியில் செங்காந்தளின் அறிவுத் திருவிழா நடத்த வாய்ப்பு கிடைத்தமை மீண்டெழுதலில் இலக்கியமும், புத்தகமும் முக்கிய பங்கு வகிக்கிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருந்தது.
இக்கண்காட்சியில் 55 புத்தகங்களைப் புத்தக ஆர்வலர்கள் வாங்கிச் சென்றுள்ளனர். ஒரு லட்சம் புத்தகங்களைக் கொண்டு சேர்ப்பது என்ற செங்காந்தளின் இலக்கில் 97,376 புத்தகங்களைக் கொண்டு சேர்க்க வேண்டிய நிலையில் இக்கண்காட்சி மூலம் நாம் கொண்டு சேர்த்த 55 புத்தகங்களைக் கழித்துக் கொண்டால் இன்னும் நாம் அடைய வேண்டிய இலக்கு 97,321 புத்தகங்கள் ஆகும்.
இலக்கை அடைய கை கோர்ப்போம்! புத்தகங்களை இல்லங்கள்தோறும் கொண்டு சேர்ப்போம்!
*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...