26 Sept 2018

கணக்குகள் காலத்திடம் செல்லாது

கணக்குகள் காலத்திடம் செல்லாது
மாறி மாறி வரும் ஆணவம்
தான் எனும் நினைப்பு
எல்லாவற்றையும் அள்ளிப் போட்டுக் குத்தும் காலம்
காற்று
அலை
வீசிக் கொண்டே இருக்கும்
ஆணவமில்லாதவைகள்
மலை
கடல்
ஒரு பொருட்டா
மலை கடலாகும்
கடல் மலையாகும்
விட்டுக்கொடுத்தல் சுகம்
அவரவருக்கு அவரவரிலிருந்து
பார்வையைத் திருப்புவது
ஏனோ கஷ்டம்
எப்படியோ வாழ்ந்து
செத்துப் போம்
கணக்கில் வராது
உம் ஆதாயக் கணக்குகள்
*****

No comments:

Post a Comment

ஞானத்தின் பாட்டு

ஞானத்தின் பாட்டு அவசரப்பட முடியாது நிதானமாகச் செல்ல வேண்டும் பல நேரங்களில் பிடிபடிவதற்குப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் அதிகம்...