23 Aug 2018

காலத்தைக் கைது செய்யாதீர்கள்!


காலத்தைக் கைது செய்யாதீர்கள்!
காலத்தைக் கைது செய்து
சிறையில் அடைக்காதீர்கள்!
நான்கு சுவர்களுக்குள்
அடைபட்டுக் கிடக்கும் காலம்
பரிதாபகரமானது.
ஒரு நாள் விடுதலை அடையும் காலம்
புதிய காலத்தோடு பொருந்த முடியாது
விலகல் அடையும் ஒளி போல
இருவேறாகப் பிரிந்து நிற்கும்
காலத்தை எதிர்நோக்குவது போன்ற
துர்பாக்கியம் வேறு இருக்காது
காலத்தைச் சுருக்கவோ விரிக்கவோ
முடியாதென சொல்பவர்களே
காலத்தைப் பிரிக்க முடியும் என்பது
உங்களுக்குத் தெரியாது.
*****

No comments:

Post a Comment

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...