30 Aug 2018

விதியை மீறுவதுதான் வாழ்க்கை


வாழ்த்தும் வாழ்க்கை தருகிறது, மரணமும் வாழ்க்கை தருகிறது பிளக்ஸ்காரர்களுக்கு.
*****
நாம் சொல்வதை நம் மனதே கேட்காது என்றாலும் நாம் எதிர்பார்க்கிறோம், நாம் சொல்வதை மற்றவர்கள் கேட்க வேண்டும் என்று.
*****
கொடுமையிலும் கொடுமை! இந்த நொடி தோன்றுவது அடுத்த நொடி மறந்து போவது!
*****
முடியவில்லை என்று சொன்னால் கேட்கிறார்களா? செய்தே ஆக வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள்.
*****
விதியை மீறுவதுதான் வாழ்க்கை. எந்த விதி என்பது அவரவர்க்கே வெளிச்சம்.
*****

No comments:

Post a Comment

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...