30 Aug 2018

கடலை நனைக்க நினைக்கும் மழை!


கடலை நனைக்க நினைக்கும் மழை!
குடை பிடிக்க வேண்டும் என்ற
எண்ணமில்லாமல்
மழையில் நனைந்து கொண்டிருக்கிறது கடல்
அம்மா திட்டுவாளோ
காய்ச்சல் வந்திடுமோ
பல வண்ண மாத்திரைகள் விழுங்க வேண்டுமோ எனும்
கவலைகள் ஏதும் இல்லை திக்கற்ற கடலுக்கு.
இவ்வளவு பெய்தும்
கடலை ஒரு சிறிதேனும் நனைக்க முடியவில்லையே என்று
'ச்சோ' என்று திட்டியபடியே
பெய்து கொண்டிருக்கிறது மழை.
*****

No comments:

Post a Comment

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...