30 Aug 2018

கடலை நனைக்க நினைக்கும் மழை!


கடலை நனைக்க நினைக்கும் மழை!
குடை பிடிக்க வேண்டும் என்ற
எண்ணமில்லாமல்
மழையில் நனைந்து கொண்டிருக்கிறது கடல்
அம்மா திட்டுவாளோ
காய்ச்சல் வந்திடுமோ
பல வண்ண மாத்திரைகள் விழுங்க வேண்டுமோ எனும்
கவலைகள் ஏதும் இல்லை திக்கற்ற கடலுக்கு.
இவ்வளவு பெய்தும்
கடலை ஒரு சிறிதேனும் நனைக்க முடியவில்லையே என்று
'ச்சோ' என்று திட்டியபடியே
பெய்து கொண்டிருக்கிறது மழை.
*****

No comments:

Post a Comment

ஞானத்தின் பாட்டு

ஞானத்தின் பாட்டு அவசரப்பட முடியாது நிதானமாகச் செல்ல வேண்டும் பல நேரங்களில் பிடிபடிவதற்குப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் அதிகம்...