31 Aug 2018

ரகசியங்கள் சொல்லப் பட மாட்டாது!


ரகசியங்கள் சொல்லப் பட மாட்டாது!
பார்வையில் திருடியதை
கல்மிஷத்தில் களவாடியதைத்
திருப்பிக் கொடுக்க பிரியமில்லை எனக்கு
காதலைக் களவு என்றவனை
கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கத்
தோன்றும் எனக்கு
"என் அதீதச் செல்லக் கோபங்களை
எப்படிச் சமாளிக்கிறாய்?" என்று
அடிக்கடி ரகசியம் கேட்கும் உனக்கு
எப்போதும் சொல்ல மாட்டேன்
தொலைத்தவர்களுக்கும், தொலைந்தவர்களுக்கும்
கோபம் இருக்கும் என்பதை!
*****

No comments:

Post a Comment

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...