26 Jun 2018

அரிச்சந்திர நாடகத்தின் மற்றுமொரு பாடம்


அரிச்சந்திர நாடகத்தின் மற்றுமொரு பாடம்
உண்மை பேசி ஆட்சியை இழந்த அரிச்சந்திரனும்
பொய் பேசி ஆட்சியைப் பிடித்த அமைச்சனும்
மூவாயிரம் ஆண்டு கால இடைவெளியைக் கடந்து
சந்தித்துக் கொண்டார்கள்
"மூவாயிரம் ஆண்டுகளுக்குப் பின்
பொய் சொன்னோம் என்று
உண்மையைப் பேசுவது அபூர்வம்!" என்று
சிலிர்த்துப் போனான் அரிச்சந்திரன்
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே
உண்மை சொன்னால் ஆட்சி பறிபோகும் என்ற
உண்மையை உணர்த்திய
அரிச்சந்திரனுக்கு நன்றி சொன்னான் அமைச்சன்
ரூபாய் நோட்டில் இருந்த காந்தி
அரிச்சந்திரனின் கால ஊர்வல நாடகத்திலிருந்து
மற்றுமொரு பாடத்தைக் கற்றுக் கொண்டார்
*****

No comments:

Post a Comment

ஞானத்தின் பாட்டு

ஞானத்தின் பாட்டு அவசரப்பட முடியாது நிதானமாகச் செல்ல வேண்டும் பல நேரங்களில் பிடிபடிவதற்குப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் அதிகம்...