25 Jun 2018

சாத்தானின் பிரார்த்தனை

சாத்தானின் பிரார்த்தனை
வரவர் மனதில் அடைத்து வைத்திருக்கும்
சாத்தானை அவிழ்த்து விடுங்கள்
அவன் விடுதலை வேண்டி பிரார்த்திக்கிறான்
அடைத்து வைப்பது கொடுமையானது என
அவன் வாதிடுகிறான்
தப்பி விடும் சாத்தானோ
விடுதலை அடையும் சாத்தானோ
எதுவும் செய்ய முடியாது
குற்றச் செயல்களுக்கான வாய்ப்புகள் இல்லாத போது
என்ற போதும்
சாத்தானை அடைத்து வைப்பதில்
சாமர்த்தியம் பேசுகிறோம்
குற்றச் செயல்களுக்கான வாய்ப்புகள்
பெருகிக் கொண்டிருக்கின்றன
சாத்தான் மீண்டும் மீண்டும்
மனதுக்குள் அடைந்து கிடக்கிறான்
உடைக்க முடியாத அளவுக்கு
சிறைச்சாலைகள் பலமானவையல்ல என்பதை
சாத்தான் உணரத் தொடங்கும் போது
பூட்டுகளின் சாவிகளுக்காக
அவன் கெஞ்சிக் கொண்டிருக்க மாட்டான்
அன்பானக் கரங்கள் தழுவிக் கொள்ளும் போது
தேவனின் கரங்களில் குழந்தையாகவும்
அவன் தயங்க மாட்டான்
*****

No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...