21 Jun 2018

அழுகையின் சந்தோசத்தைச் சொல்!


அழுகையின் சந்தோசத்தைச் சொல்!
பள்ளத்தாக்கில் பிடித்துத் தள்ளுகிறாய்
விழுவதைப் பார்த்து சிரிக்கிறாய்
விழுந்து முடித்ததும்
வீர வணக்கம் வைக்கிறாய்
அதை ஏற்றுக் கொண்டு
பறக்கத் தொடங்குகிறேன்
கைதட்டி விசிலடிக்கத் தொடங்குகிறாய்
எப்படி இது சாத்தியம் என்பவர்களுக்கு
காதலில் எல்லாம் எதிர்மாறானது என்பதை
நேர்மாறாக எப்படி புரிய வைப்பது?
அழுகையின் சந்தோசத்தை நீயே சொல்.
சந்தோசத்தின் வலியை நான் பகிர்கிறேன்.
*****

No comments:

Post a Comment

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...