27 Apr 2018

பின்னுள்ள தத்துவம்


பின்னுள்ள தத்துவம்
ஒரு பூச்சிக்கொல்லி மருந்தின்
பின்னுள்ள தத்துவம் தெரியாமல்
வாங்கி வந்தான் விவசாயி ஒருத்தன்
முடிந்தால் பூச்சிகளை அழி
முடியாவிட்டால் நீயே குடித்து
உன்னை நீயே அழி
கார்ப்பரேட் சிரிப்புச் சிரித்தது
கருவாகி உருவாகி வந்த
பூச்சிக்கொல்லி மருந்து.
*****

No comments:

Post a Comment

ஞானத்தின் பாட்டு

ஞானத்தின் பாட்டு அவசரப்பட முடியாது நிதானமாகச் செல்ல வேண்டும் பல நேரங்களில் பிடிபடிவதற்குப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் அதிகம்...