30 Jan 2018

தப்பித்தல் முட்டாள்தனம்

தப்பித்தல் முட்டாள்தனம்
வாழப் பழகிக் கொண்ட
குருவிகளுக்கு டார்வின் மேல் கோபம்
அவைகளுக்கு றெக்கைகள் இல்லை
தத்தித் தத்தி நடைபயில
கால்கள் இல்லை
எங்கே தப்பி விடுமோ என்ற சந்தேகத்தில்
கத்தரிக்கப்பட்டு இருந்தன
முன்பொரு காலத்தில் நீங்கள்
இருந்த இடத்திற்கு காடென்று பெயர்
இப்போதொரு காலத்தில்
இருக்கும் இடத்திற்கு கூண்டு என்று பெயர்
உச்சரிக்கப்படும் வாக்கியங்களை
வெறுக்கின்றன குருவிகள்
முடமாக்கப்பட்ட வாழ்வில்
தப்பித்தல் முட்டாள்தனம் என்பதை
உணர்ந்திருக்கின்றன அவைகள்
கூண்டுக் கம்பிகளைப் பார்த்து
நக்கலாய்ச் சிரிக்கின்றன
குருவிகள் மகிழ்வதாகப்
பார்த்து ரசிக்கிறார்கள் மனிதர்கள்

*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...