தானே கற்றல்
பசிக்குச்
சில தூண்டில்கள் கொடுக்கப்பட்டது
ஆறு
வறண்டு கிடந்தது
தூண்டிலில்
மாட்ட வைத்திருந்த
புழுக்களைத்
தின்னத் தொடங்கியவன்
தன்னைத்
தேடி வரும்
பூச்சிகளைப்
பிடிக்கக் கற்றுக் கொண்டான்
*****
கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...
No comments:
Post a Comment