30 Dec 2017

வார்த்தைகளென சுருங்கும் வாழ்க்கை

வார்த்தைகளென சுருங்கும் வாழ்க்கை
உன்னைப் பார்த்த போது பிடித்துப் போனது
ஏதோ தோன்ற
எழுதிக் கொண்டே இருந்தேன்
உன்னைப் பிடிக்காமல் போனதும்
ஏதேதோ தோன்ற
எழுதிக் கொண்டே இருந்தேன்
எப்படியாகினும் எழுதித் தள்ளுவேன்
எனும் போது
உன்னைப் பார்ப்பதும் ஒன்றே
பார்க்காமல் போவதும் ஒன்றே
எழுத்தின் வழி நான் உரையாடிக் கொண்டிருக்கிறேன்
பிடித்தல் ஒரு வார்த்தை
பிடிக்காதது ஒரு வார்த்தை
அதை நீ புலம்புவாய்
நான் எழுதுவேன்
சிலர் உரையாடலாம், விவாதிக்கலாம்
வார்த்தைகள் வளர்ந்து கொண்டே இருக்கும்
வாழ்க்கை அதற்குள் சுருங்கிக் கிடக்கும்

*****

No comments:

Post a Comment

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...