31 Dec 2017

மெளனத்திற்காகக் காத்திருப்பவர்கள்

மெளனத்திற்காகக் காத்திருப்பவர்கள்
விசயம் ஒன்றுதான்
அதை நீ புதிய பரிமாணம் என்று சொல்லி
கைதட்டச் சொல்வாய்
புத்தர் புன்னகைப்பார்
கிருஷ்ணர் குதூகலிப்பார்
கிறிஸ்து சிரிப்பார்
அவர்கள் சொல்லி மெளனமாகி விட்டார்கள்
நீ இப்போதுதான் சொல்லெடுத்துக் கொண்டிருக்கிறாய்
உன் மெளனத்துக்காகக் காத்திருப்பார்கள் அவர்கள்

*****

No comments:

Post a Comment

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...