29 Nov 2017

காரியம்

காரியம்
மூணாம் நாள் காரியம்
முடிந்ததும் புறப்பட்டோம்.
காலம் முழுதும்
தன் பிள்ளைமார்கள்
பால் வாங்கவோ
தண்ணீர் பிடிக்கவோ அனுமதிக்காமல்
பேருந்து வரை ஏற்றி விட்டு வந்த
அம்மாவை
முதல் காரியமாய்
சட்டமிட்டு ஒரு புகைப்படமாய்
சுவரில் மாட்டி வைத்தோம்.
இனி அவரவர் காரியம்
பால் வாங்கவும்
தண்ணீர் பிடிக்கவும்
பேருந்து பிடித்து ஏறி இறங்கவும் என
ஏகப்பட்டது இருக்கிறது.

*****

No comments:

Post a Comment

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...