29 Nov 2017

தலைவன் சொல் தெளிந்த தலைவி

தலைவன் சொல் தெளிந்த தலைவி
முத்தமிடத் தொடங்குகையில்
சூடுதான்
மேலே மேலே போகப் போக
குளிர்ந்து விடும் என்று
வெயில் சொன்னதை நம்பி
அதற்கு இடம் கொடுத்து
வறண்டு போனது
பாளம் பாளமாய் வெடித்த குளம்.
சொன்ன சொல் தவறாமல்
ஒரு நாள்
மேகமாய்ப் பொழிந்த வெயிலை
தன்னுள்
போதும் போதும் எனும் அளவுக்கு
தண்ணீராய் நிரப்பிக் கொண்டது
தாகம் அடங்காத குளம்.

*****

No comments:

Post a Comment

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...