பேரன்பு
தண்டவாளங்கள்
நிலையாக இருப்பதால்தான்
ரயிலில் பயணிக்க
முடிகிறது
என்றேன் அம்மாவிடம்.
ரயில்கள் பயணிக்கத்தான்
தண்டவாளங்கள்
இருக்கின்றன
என்றாள் அம்மா
இயல்பாக விளம்பப்பட்ட
அன்பை
பேரன்பாய்
விளக்கியபடி.
*****
அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...
No comments:
Post a Comment