பேரன்பு
தண்டவாளங்கள்
நிலையாக இருப்பதால்தான்
ரயிலில் பயணிக்க
முடிகிறது
என்றேன் அம்மாவிடம்.
ரயில்கள் பயணிக்கத்தான்
தண்டவாளங்கள்
இருக்கின்றன
என்றாள் அம்மா
இயல்பாக விளம்பப்பட்ட
அன்பை
பேரன்பாய்
விளக்கியபடி.
*****
ஞானத்தின் பாட்டு அவசரப்பட முடியாது நிதானமாகச் செல்ல வேண்டும் பல நேரங்களில் பிடிபடிவதற்குப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் அதிகம்...
No comments:
Post a Comment