31 Oct 2017

வன்புணர்ச்சியாளர்களுக்கு மனதார நன்றி

வன்புணர்ச்சியாளர்களுக்கு மனதார நன்றி
அந்த வன்புணர்ச்சிக்குப் பின்
டிராகுலாக்களை நேசிக்கத் தொடங்கி விட்டாள்
மென்மைக்கு உவமிக்கப்பட்ட அவள்
மனம் முழுதும் இருளின் கோரப் பிசாசுகள்
தன்னோடு சிநேகம் பாராட்டுவதாக சொல்கிறாள்
கத்திகளை ஸ்பூன் போல் உபயோகித்து
சாப்பிட பழகி விட்டதாக
அன்றாட நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்கிறாள்
இந்த மிருகங்களுக்காகத்தான்
இருக்கிறது போலும்
மிருக வதைத் தடுப்புச் சட்டம் என்று
அடிக்கடி சத்தம் போட்டுச் சிரித்துக் கொள்கிறாள்
கருணையற்ற நீதிமன்றங்களின்
குறுக்கு விசாரணையில் நிகழ்ந்த
வார்த்தைகளின் வன்புணர்ச்சிக்குப் பின்
கூண்டில் நின்ற வன்புணர்ச்சியாளர்களை
கருணையோடு பார்த்த அவள்
இவ்வளவு நீண்ட நேரம் வன்புணர்ச்சி செய்யாத
அவர்களுக்கு மனதார நன்றி சொல்லிக் கொண்டாள்.

*****

1 comment:

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...