31 Oct 2017

உழைப்பை உறிஞ்சும் கலை

உழைப்பை உறிஞ்சும் கலை
            எஸ்.கே. ரெபரன்ஸ் அடிப்படையில் எழுதுபவன். அவனாக எழுதினால் அது அது அவனது சக்தியை உறிஞ்சி விடுவதாக கூறுவான்.
            ஒரு வகையில் அவனுக்கு உழைப்பதற்கு ஆர்வம் கிடையாது. ஆனால் சமூகத்தில் எதாவது ஒரு வகையில் ஒவ்வொரு மனிதனும் எதையாவது ஒன்றைச் செய்ய வேண்டியிருக்கிறது. அதற்காக அவன் உழைப்பது போல் நடிக்க வேண்டியிருக்கிறது என்று சொல்வான்.
            மற்றபடி உழைப்பினால் என்ன பயன் என்பதுதான் எஸ்.கே.வின் கேள்வி. அவன் உழைக்க, அதற்கானப் பயனை எவனோ ஒருவன் தட்டிப் பறித்துக் கொண்டு போய் விடுவதாக அவன் நினைக்கிறான்.
            எஸ்.கே.வைப் பொருத்த வரையில் உழைப்பது என்பது முக்கியமன்று. உழைப்பை எப்படிச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது என்பதுதான் முக்கியமானது.
            அது சில தந்திரங்களில் இருப்பதாக அவன் கருதுகிறான். பணம், தந்திரம், ஆசையூட்டுதல், உசுப்பி விடுதல் ஆகியவற்றின் மூலம் பிறரிடமிருந்து உழைப்பை உறிஞ்சிக் கொள்ள முடியும் என்று அவன் நினைக்கிறான்.
            சமூகத்தின் நிலைகளும், நிலைக்களன்களும் அப்படித்தானே அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சக் கூடிய வகையில்தானே இருக்கின்றன.
            அந்த அமைப்பு நிலையில் அவனும் ஒருவனாக இடம் பெற்று விட்டால் பிறரது உழைப்பை அதன் மூலம் எளிதில் பெற்று விடலாம் என்று நினைக்கிறான் எஸ்.கே. இப்படி எஸ்.கே. கெட்டுப் போவதைப் பார்த்து நமக்கு என்ன கவலை? எஸ்.கே.வைப் பார்த்து அரசியல் செய்பவர்கள் கெட்டுப் போய் விடுவார்களோ என்றுதான் கவலையாக இருக்கிறது!

*****

No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...