29 Oct 2017

கருணை

கருணை
துரு பிடிக்காத கத்தியைச் செருகும்
இவன்
கருணையுள்ள கொலைகாரன்.
துருபிடித்த கத்தியைச் செருகும்
அவன்
கருணையற்ற கொலைகாரன்.
கத்தியால் குத்தும்
கொலைகாரர்கள் பெருகி விட்ட
பெரு நகர வீதியில்
நாலு மூலை முக்கில்
வீற்றிருக்கும் விநாயகரிடம்
கண்ணீர் மல்க
வேண்டிக் கொள்ளுங்கள்
தக்கன தப்பி பிழைப்பதற்கு
கருணையுள்ள கொலைகாரனின் கத்தியில்
குத்துப்படுவதாக என்று.

*****

No comments:

Post a Comment

ஞானத்தின் பாட்டு

ஞானத்தின் பாட்டு அவசரப்பட முடியாது நிதானமாகச் செல்ல வேண்டும் பல நேரங்களில் பிடிபடிவதற்குப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் அதிகம்...