29 Sept 2017

இப்படித்தான் வெளுத்தது பணம்!

இப்படித்தான் வெளுத்தது பணம்!
            பண மாற்ற மதிப்பின் மூலம் மிகப் பெரும் மாற்றம் வந்து விடும் என்றார்கள். தற்போது வெளிவரும் புள்ளி விவரங்களைப் பார்க்கும் போது ஏமாற்றம் வந்ததுதான் மிச்சம்.
            கூடுதல் பணம் வைத்திருப்பவர்களும், கருப்புப் பணம் வைத்திருப்பவர்களும் பண மாற்ற மதிப்பில் சிக்குவார்கள் என அரசாங்கம் எதிர்பார்த்தது. அவர்கள் அரசாங்கத்தைச் சிக்க வைத்து விட்டார்கள்.
            அப்போது டாஸ்மாக்கில் பணியாற்றுபவர்கள், வசூல் மையங்களில் பணியாற்றுபவர்கள், பேருந்தில் வசூலாகும் பணத்தை நிர்வகிப்பவர்கள் என மக்கள் பணத்தைக் கையாளும் மற்றும் வசூல் செய்யும் நிலையில் இருந்தவர்கள் அனைவரும் வசூலானப் பணத்தோடு கட்சிகளின் முக்கியப் பிரமுகர்கள் வீட்டில்தான் நின்றார்கள்.
            அவர்கள் தாங்கள் வசூல் செய்த மற்றும் கல்லா கட்டிய பணத்தை பிரமுகர்களிடம் கொடுத்தார்கள். பிரமுகர்களிடம் இருந்த பழைய ஐநூறையும், ஆயிரம் ரூபாய் நோட்டுகளையும் அவர்கள் பெற்றுக் கொண்டு வசூலானப் பணம் என்ற பெயரில் வங்கியில் கட்டினார்கள். அதற்காக அவர்கள் மிகப் பெரிய அளவில் கமிஷன் வருமானம் பெற்றார்கள்.
            கருப்புப் பணத்தை வெளுப்புப் பணமாக வெகு அழகாக அந்த இக்கட்டான காலத்திலும் சலவை செய்தார்கள்.
            வங்கிகள் குறிப்பாக தனியார்கள் வங்கிகள் புதுப் புது சேமிப்புக் கணக்குகளைத் தொடங்கி மூன்று லட்சங்களாக நிரப்பத் தொடங்கின.
            ஒரு சில ஓட்டைகளோடு ஏதோ ஓடிக் கொண்டிருந்த படகு கடைசியில் சல்லடையாய் ஆனதுதான் மிச்சம்.
            சல்லடை ஆனாலும் படகு படகுதான் என்ற ஒரு வாதமும் இருக்கிறது. ஆனால் அந்த வாதத்திற்கு எதிர்வாதம் இல்லை. ஏன் இல்லை என்றால் விதாண்டாவாதத்தின் முக்கிய பண்பே அதுதான்.

*****

No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...