29 Sept 2017

பையில் இருப்பதையல்ல... பையையே அடிக்கிறார்கள்!

பையில் இருப்பதையல்ல... பையையே அடிக்கிறார்கள்!
            நகர்ப்புறங்களிலோ, புறநகர்ப் புறங்களிலோ வாங்கிய பொருள்களை ஒரு பையில் இட்டு நிறுத்தியிருக்கும் இரு சக்கர வாகனத்தில் தொங்க விட்டு செல்ல முடியாது. சென்று வருவதற்குள் பையில் இருப்பதை ஆடுகளோ, மாடுகளோ தின்று தீர்த்திருக்கும்.
            ஆடு, மாடுகளிடம் அந்தப் பை தப்பித்தால் அங்கே திரிந்து கொண்டிருக்கும் மனநலம் பாதித்த மனிதர்கள் கையில் பயணித்துக் கொண்டிருக்கும்.
            செல்லும் இடங்களில் எல்லாம் பையோடு அலைவது உசிதம். பையை ஒருவேளை இழந்து விட்டால் அதை வெளியில் சொல்லாமல் இருப்பது இன்னும் உசிதம் மற்றும் விவேகம்.  
            விசயத்தைக் கேள்விபடுபவர்கள் பையை இழந்தவரைத் திட்டோ திட்டென்று திட்டுகிறார்கள். பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டாமா என்று பாய்ந்து பாய்ந்து மிரட்டுகிறார்கள். இந்தக் காலத்தில் இப்படியா அசட்டையாக இருப்பது மட்டையாகும் வரை அறிவுரைகளால் கும்மோ என்று கும்மி விடுகுறார்கள். மனநலம் பாதித்தவரிடம் பையைத் தொலைத்தவரை மனநலம் பாதிக்கும் அளவுக்குக் கொண்டு சென்று விடுகிறார்கள்.
            இவைகளையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் இதில் ஆச்சரியமான சங்கதிகளும் இருக்கத்தான் செய்கின்றன.
            பையில் எது இருந்தாலும் அதை ஆடுகளும், மாடுகளும் தின்கின்றன.
            எங்கு பை தொங்கிக் கொண்டிருந்தாலும், அதை மனநலம் பாதித்த மனிதர்கள் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

*****

No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...