28 Sept 2017

பொறுத்திருத்தலையும் கற்றுக் கொள்ள வேண்டும்!

பொறுத்திருத்தலையும் கற்றுக் கொள்ள வேண்டும்!
            தொடர்ச்சியாக செய்து கொண்டிருந்த செயலை சில பொழுதுகளில் செய்ய முடியாத நிலை ஏற்படுவது உண்டு. செய்ய முடியாத தடைபட்ட அந்த நிலையைக் கண்டு கலங்க வேண்டியதில்லை. இத்தனை நாள் முடிந்த செயல் இன்று முடியவில்லையே என்று ஏங்க வேண்டியதில்லை.
            செய்ய முடியாத நிலை அந்தச் செயலுக்கான ஓய்வுக்காலம். அது சில காலம் நீடிக்கும் எதுவும் சில காலம் என்பது போல. அது இயற்கையாக அமைந்த ஓய்வுக்காலமும் கூட.
            இயற்கையிலேயே அப்படி ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பிரேக் இருக்கிறது. அந்தத் தடைக்காலத்தில் செயலைச் செய்ய வேண்டுமே என்று மீறிக் கொண்டு செய்ய முயல வேண்டியதில்லை.
            தொடர் முயற்சி, கடின உழைப்பு என்பது நல்ல விசயம். அதை அந்தத் தடைக்காலத்தில் முயன்று பார்க்க வேண்டாம். காத்திருப்பு பலன் கொடுக்கும். மீண்டும் மனம் உற்சாகம் அடையும். அப்போது அதன் வேகம் இரட்டிப்பாக இருக்கும். கடின உழைப்பு என்பது ஆர்வத்தோடு செய்யக் கூடியதாகவும் இருக்க வேண்டும். மன இறுக்கத்தோடு செய்வதாக இருக்கக் கூடாது.
            வாழ்க்கையில் பொறுத்திருக்கவும் வேண்டும் என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டிய காலக் கட்டம் அது.

*****

No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...