28 Sept 2017

கடினக் காலத்தைக் கடத்தல்

கடினக் காலத்தைக் கடத்தல்
            சில செயல்களைச் செய்யும் போது ஏன்தான் இந்தச் செயலை ஆரம்பித்தோம் என்று எண்ணம் தோன்றுவதுண்டு. சில செயல்கள் அப்படி அந்த அளவுக்கு மன இறுக்கம் தருவதாக உள்ளது.
            ஆனால், அந்தச் செயல் முடிந்த பிறகு அந்த மன இறுக்கம் தானாகவே விலகி விடும். இதற்குப் போயா இவ்வளவு மன இறுக்கம் கொண்டோம் என்று எண்ணவும் தோன்றும்.
            ஆக, அந்தக் காலத்தைக் கடத்தல்தான் எல்லாம். அந்தக் காலத்தைக் கடப்பதற்குக் கூட எதுவும் செய்ய வேண்டாம். நாம் பாட்டுக்கு இருந்தால் அதுவாகக் கடந்து போய் விடும். கடினமான காலங்களை அப்படித்தான் கடக்க வேண்டும்.
            மனதைப் போட்டு எதையாவது செய்தால் பிரச்சனை. அதனதனை அதனதன் போக்கில் விட்டு விட்டால் எந்தப் பிரச்சனையும் இல்லை. அதுவதுவாக ஒரு முடிவுக்கு வந்து விடும்.
            சில செயல்களில் நாம் முடிவைத் தேடிக் கொண்டு போக வேண்டியதில்லை. முடிவு தானாக வரும்.

*****

No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...