28 Sept 2017

பாம்பு கதை

பாம்பு கதை
பாம்புகள் குறித்த கதைகள்
பிரமாண்டமாக இருக்கின்றன
பழிவாங்கும் பாம்புகள்
தெய்வாம்சப் பாம்புகள் என்று
ஒவ்வொரு கதையும்
பேய்ப்படம், சாமிப்படம் போல
விதவிதமானவை
பாம்பு குறித்த பயம் கொண்ட
பட்டினத்துவாசி ஒருவர்
தான் அதை டிஸ்கவரி சேனலில் பார்ப்பதோடு சரி
நேரில் பார்த்ததில்லை என்கிறார்
அவரைப் பாம்பு போல் நினைத்து
படை நடுங்கிக் கொண்டிருக்கும்
அவரது குடும்பத்தினருக்குத் தெரியும்
பட்டினத்தில் பாம்புகளின் வடிவம் வேறு என்பது
இந்நேரம் மனிதப் பாம்புகள் குறித்த
நிறைய கதைகள் பேசிக் கொண்டிருக்கக் கூடும்
நிஜப் பாம்புகள்.

*****

No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...