26 Sept 2017

நாயகன்

நாயகன்
மூன்று அடிகள் வாங்கி
சட்டை கிழிந்து அல்லது
உடம்பில் ரத்தம் வழிந்து
எதிர்த்தவர்களைத் தூக்கிப்
பந்தாடுவான் நாயகன்.
திரைப்படத்துக்குப் பதில்
செய்திச்சேனல் ஓடிக் கொண்டிருந்த
அன்றொரு நாளில்
அப்படியொரு காட்சி ஓடிக் கொண்டிருக்க
யாரிவர் என்ற கேள்விக்கு
சபை நாயகர் என்ற பதில் கிடைக்க
ஓடிக் கொண்டிருந்தன
சட்டப்பேரவை நிகழ்ச்சிகள்.

*****

No comments:

Post a Comment

ஞானத்தின் பாட்டு

ஞானத்தின் பாட்டு அவசரப்பட முடியாது நிதானமாகச் செல்ல வேண்டும் பல நேரங்களில் பிடிபடிவதற்குப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் அதிகம்...