31 Aug 2017

எத்தனை பதில்கள் வைத்திருக்கிறாய் நீ?

எத்தனை பதில்கள் வைத்திருக்கிறாய் நீ?
            நீ நினைத்த மாதிரி காரியம் நடக்காத போது, உன் மனம் முழுதும் வெறுப்பு நிறையாமல் இருக்குமா? அந்த வெறுப்பை எப்படிக் களைவது என்பது உனக்குத் தெரியுமா?
            உன்னுடைய ஆசையை வைத்துதான் உன்னிடம் பலரும் விளையாடுகிறார்கள் என்பதை நீ அறிந்து இருக்கிறாயா? நீ ஆசைப்படலாம். அதை வெளிப்படையாகக் காட்டுவது என்பது உன் பலகீனத்தைக் காட்டுவது என்பதை புரிந்து கொண்டாயா?
            அதைத் தெரிந்து கொண்டால் அதை வைத்துதான் எதிரிகள் உன்னிடம் போக்குக் காட்டுவார்கள் மற்றும் போங்கு காட்டுவார்கள் என்பதை நீ உணர்கிறாயா?
            ஆக, அது எதிரிகளின் தவறல்ல, அது எதிரிகளின் சுபாவம்.
            இந்த உலகில் ஒவ்வொன்றிற்கும் ஒரு சுபாவம் இருக்கிறது. அந்தச் சுபாவத்தைப் புரிந்து கொள்ளாமல் நீ எதுவும் செய்ய முடியாது என்பதை ஒத்துக் கொள்கிறாயா?
            இதில் எத்தனை கேள்விகளுக்கு உன்னிடம் பதில் இருக்கிறது? நிறைய கேள்விகளுக்குப் பதில் இருக்கிறது என்றால் அது வேறு விசயம். பேசுவதற்கு ஒன்றுமில்லை. நீ இன்னும் மெளனத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும்.
            பதில்கள் இல்லை என்றால் நீ நிறைய பதில்களைச் சேகரிக்க வேண்டும். அந்தக் குப்பைகளைச் சேகரித்து எரித்த பின்தான் உனக்கான திருநீற்றை நீ பூசிக் கொள்ள முடியும்.

*****

No comments:

Post a Comment

மனக்கண்ணாடியில் பார்த்தல்

மனக்கண்ணாடியில் பார்த்தல் நீ மிகுந்த மனக்கவலையை உருவாக்குகிறாய் எப்படி அதை எதிர்கொள்வது என்று தெரியவில்லை இருந்தாலும் எப்படி எதிர்கொண்...