28 Aug 2017

தூரிகை போன்ற மனிதர்கள்

தூரிகை போன்ற மனிதர்கள்
            அழகான ஒவியங்களைத் தீட்டுகின்றன தூரிகைகள். ஓவியங்கள் புகழ் பெறுகின்றன. தூரிகைகளுக்கு எதுவும் கிடைப்பதில்லை. ஓவியங்களால் ஓவியர்கள் புகழ் பெறுகிறார்கள். தூரிகைகளுக்கு அப்போதும் எதுவும் கிடைப்பதில்லை. மென்மேலும் ஓவியங்களைத் தீட்டிக் கொண்டே செல்கின்றன தூரிகைகள்.
            வண்ணங்கள் ஓவியங்களோடு இருக்கின்றன. அதன் சிறப்பைப் பகிர்ந்து கொள்கின்றன. தூரிகைகளுக்கு அந்தப் பாக்கியமும் இல்லாமல் போகிறது.
            கடமையைச் செய்த திருப்தி மட்டுமே தூரிகைகளுக்கு இருக்கிறது. ஓவியனின் ஆழ்ந்த நேசிப்புக்கு உரியதாகவும் தூரிகை இருக்கிறது.
            மனித குலத்தைச் சுற்றி அன்பை மட்டும் பொழியும் அத்தனை பேரும் தூரிகைப் போன்றவர்கள்தான். அவர்கள் மனித குலத்தை அழகான ஓவியங்களாகக் காட்டிக் கொண்டே இருக்கிறார்கள். அதற்காக அவர்கள் எந்த பிரதிபலனையும் எதிர்பார்ப்பதில்லை. மென்மேலும் மனித குலத்தை அழகான ஓவியங்களாகத் தீட்டிக் காட்டுவதிலே முனைப்பாக இருக்கிறார்கள்.

*****

No comments:

Post a Comment

மனக்கண்ணாடியில் பார்த்தல்

மனக்கண்ணாடியில் பார்த்தல் நீ மிகுந்த மனக்கவலையை உருவாக்குகிறாய் எப்படி அதை எதிர்கொள்வது என்று தெரியவில்லை இருந்தாலும் எப்படி எதிர்கொண்...