31 Aug 2017

ஆகப் பெரும் கொள்கை!

ஆகப் பெரும் கொள்கை!
            எஸ்.கே. அவ்வளவு கோபப்பட்டதில்லை. வேலையை முடிக்க வேண்டும் என்ற வெறுப்பு. அது முடியாமல் இழுத்துக் கொண்டு போகும் நிலை. இவையெல்லாம் சேர்ந்து அவனை அத்தகைய ஒரு நிலைக்கு கொண்டு சென்று விட்டது.
            அன்று காலையில் இட்டிலி வாங்கச் சென்ற போது கோபம் உச்சிக்கேறிய நிலையில்தான் சென்றான். அவனுக்கு யாரேனும் எப்போதும் ஒரு வேலையைச் செய்யச் சொல்லி வற்புறுத்திக் கொண்டு இருக்கிறார்கள். அது அவனுக்கு வெறுப்பைத் தருகிறது. சட்னியாகி விடுகிறான்.
            தவிரவும் அவன் டென்ஷன் ஆகி விட்டதை அறிந்தால் சுற்றியுள்ளவர்களுக்குக் கொண்டாட்டம். அவனைச் சீண்டிப் பார்த்து ஆனந்தித்துக் (குஷியாகி) கொள்வார்கள்.
            அவனை இப்படி மன ரீதியாக நையப் புடைத்தால் அது அவனுக்கு வெறுப்பைத்தானே தரும். அப்படித்தான் அவன் வெறுப்புகிறான்.
            அளவுக்கு அதிகமாக நெருங்கினால் இப்படித்தான், அளவுக்கு அதிகமாக விலகிச் செல்வதற்கானப் பிரிவைத் தரும் என்பதை அவன் உணர்ந்து கொண்டான்.
            ஒன்றில் வெற்றி பெற்று விட்டால் அதே மாதிரி இன்னொன்றில் வெற்றி பெற முடியும் என்று தப்புக் கணக்குப் போட்டுக் கொள்கிறான்.
            தன்னம்பிக்கையை நம்பிச் செயல்படுவதை விட பொறுமையை நம்பி, அமைதியை நம்பிச் செயல்படுவது நன்று என்று அவன் நினைக்கிறான். நிதானம் என்பது முக்கியமானது அவனது ஆகப் பெரும் கொள்கை.

*****

No comments:

Post a Comment

மனக்கண்ணாடியில் பார்த்தல்

மனக்கண்ணாடியில் பார்த்தல் நீ மிகுந்த மனக்கவலையை உருவாக்குகிறாய் எப்படி அதை எதிர்கொள்வது என்று தெரியவில்லை இருந்தாலும் எப்படி எதிர்கொண்...