29 Aug 2017

இரத்தப்பாசி

இரத்தப்பாசி
காவிரி ஆற்றில்
தண்ணீர் மொண்டு குடித்து
பசியாறியிருந்த
பாமரர்களை
சுட்டுக் கொன்றான்
அண்டை மாநிலத்துக்காரன்
வறட்சி எனும் துப்பாக்கியெடுத்து
மாரடைப்பு எனும் குண்டு பொருத்தி.
சில டி.எம்.சி. தண்ணீர் கொடுக்க மறுத்து
எமனின் பாசக்கயிற்றை
அங்கிருந்தே வீசியெறிந்தான்
தற்கொலைச் சுருக்காய் விவசாய கழுத்தை நோக்கி.
பயிர்களை எரித்த சாம்பலை சிமெண்டாக
உயிர்களைக் கொன்ற எலும்புகளை கற்களாகக் கொண்டு
பிரமாண்ட அணைகளை எழுப்ப
தேங்கும் நீர் சிவக்கிறது ரத்தப்பாசி பிடித்து.
சில சொட்டுகளைத் தூவாது சென்ற வானத்திற்கும்
அண்டை மாநிலத்துக்காரனைப் போல்
அத்தனை பிடிவாதம்!

*****

No comments:

Post a Comment

ஞானத்தின் பாட்டு

ஞானத்தின் பாட்டு அவசரப்பட முடியாது நிதானமாகச் செல்ல வேண்டும் பல நேரங்களில் பிடிபடிவதற்குப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் அதிகம்...