31 Aug 2017

முடிவில்லாத முடிவாளன் ஒருவன்

முடிவில்லாத முடிவாளன் ஒருவன்
            எஸ்.கே.யின் முதன்மையான வாழ்வைச் சிதிலமாக்கி விட்டனர் அந்தப் பாக்குக்கொட்டைக் குடும்பத்தினர். இனியும் அவன் எப்படி பாக்குக்கோட்டை குடும்பத்தாரோடு கொஞ்சிக் கொண்டிருக்க முடியும்?
            எம்.கே. என்பவன் அடிக்கடி அவனிடம் வந்து நகையையும், பணத்தையும் திருப்பித் தந்து விடுவதாகக் கூறிச் செல்கிறான். "சரி! தாருங்கள்!" என்று எஸ்.கே. அவர்களிடம் மண்டியிட்டுக் கெஞ்சிப் பார்க்கிறான். ஆனால் அவர்கள் அதை ஒரு காமெடி போல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது விளங்க எஸ்.கே.விற்கு இன்னும் நாட்கள் பிடிக்கும்.
            எஸ்.கே.வின் மனதை ஆழம் பார்ப்பதற்காக அதை அவர்கள் செய்கிறார்கள். அதை எஸ்.கே. புரிந்து கொள்ளாது, அவர்கள் எல்லாவற்றையும் தந்து எல்லாவற்றையும் முடித்துக் கொள்ளவே பார்க்கிறார்கள் என்ற மாய விநோத கற்பனையில் வாழ்ந்து வருகிறான். ஆக ஒரு எதிர்பார்ப்பை கருதிக் கொண்டு அது நடக்கவில்லையே என வருந்துகிறான் பாவம்!
            மேலும் சில விசயங்களில் அவன் மட்டும் எப்படி முடிவு செய்ய முடியும்? அவன் வீட்டு நாய், பூனை மற்றும் துடைப்பக்கட்டைகளைக் கலந்து ஆலோசித்து அதன்படிதான் ஒரு முடிவுக்கு வர முடியும். அதனால் இதில் அவசரப்பட்டு நான் முடித்துத் தருகிறேன் என்று வார்த்தையை விட முடியாமல் தவிக்கிறான்.
            எஸ்.கே.யைப் பொருத்த வரையில் இனி எதுவும் இல்லை. எல்லாம் அவரவர்களாகப் பார்த்து ஒரு முடிவு செய்யட்டும். அதுவும் இல்லாமல் அவன் யாருடைய ஆலோசனைகளும் இல்லாமல் இதுவரை எதுவும் செய்தது இல்லை. அவனுக்கு முடிவு என்றால் அலர்ஜி.
            மற்றவர்களிடம் அதை ஒப்படைத்து விட்டு அவர்களைக் கவலைக்கு ஆளாக்கி தப்பித்து விடுவான். எஸ்.கே. அப்படி நினைக்கவில்லை. அப்படி திட்டமிடவில்லை. என்றாலும் அப்படித்தான் நடக்கிறது. அவனது ஜாதகம் அப்படி!

*****

No comments:

Post a Comment

மனக்கண்ணாடியில் பார்த்தல்

மனக்கண்ணாடியில் பார்த்தல் நீ மிகுந்த மனக்கவலையை உருவாக்குகிறாய் எப்படி அதை எதிர்கொள்வது என்று தெரியவில்லை இருந்தாலும் எப்படி எதிர்கொண்...