27 Jun 2017

வீக்கத்தின் வளர்ச்சி


பிரக்ஞை
இறந்துப் போன தாத்தாவுக்காக
அழும் பிரக்ஞையில் இல்லை
பாட்டி!
******

வீக்கத்தின் வளர்ச்சி
வளர்ந்த நகரத்தின் அடையாளம்
சுரங்கப் பாதை என்றார்கள்!
அங்கும் நான்கு பிச்சைக்காரர்கள்
மூலைக்கு ஒன்றாக அமர்ந்திருந்தார்கள்!
கண்ணில்லாதவர்கள் பட்ஸ்களும்
கால் இல்லாதவர்கள் ஊக்குகளும்
விற்றுக் கொண்டிருந்தார்கள்!
நகரம் வளர்ந்து விட்டதுதான்
பெரிய மாளிகையில் இடம் இல்லாமல்
ப்ளாட்பாரம் வரை மக்கள் வசிக்கும் அளவிற்கு!
******

No comments:

Post a Comment

ஞானத்தின் பாட்டு

ஞானத்தின் பாட்டு அவசரப்பட முடியாது நிதானமாகச் செல்ல வேண்டும் பல நேரங்களில் பிடிபடிவதற்குப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் அதிகம்...