27 Jun 2017

மார்க்ஸூக்குப் பிடித்த குறள்


மார்க்ஸூக்குப் பிடித்த குறள்
            அன்புத் தம்பி பிரபாகரனிடம் பேசிக் கொண்டிருந்தேன். திருக்குறளில் கம்யூனிசக் கருத்துகள் இருக்கின்றன என்றார்.
            எனக்கு ஆர்வம் தொற்றிக் கொண்டு விட்டது. "எந்த இடத்தில்?" என்றேன்.
            "எந்த இடத்துலன்னு தெரியல, கேள்விப் பட்டிருக்கிறேன்!" என்றார் பிரபாகரன்.
            "சரி! கண்டுபிடித்து சொல்லுங்க!" என்றேன்.
            அவருக்கு முன் நான் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு.
            அநேகமாக, அது,
            "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
            தொகுத்தவற்றுள் எல்லாம் தலை"         - 322
                        என்ற குறளாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். பிரபாகரன் கண்டுபிடித்துச் சொன்னால் அதையும் பதிவிடுகிறேன்.
            எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற கருத்தைச் சொல்லும் இக்குறள் கார்ல் மார்க்ஸூக்கு உவப்பான குறளாக இருப்பதோடு, பல்லுயிர் பெருக்கம் பேசும் சூழலியல்வாதிகளுக்கும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் நெருக்கமான குறளாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன்.
            உங்கள் கருத்துகளையும் நீங்கள் பதியலாம்!
*****

No comments:

Post a Comment

What if the scale itself is wrong?

What if the scale itself is wrong? The period between 2000 and 2024 can be referred to as the period in which many changes took place in s...