27 Jun 2017

நீதி மனு


நீதி மனு
            நீதி வேண்டும் என்று வழக்குத் தொடங்க வழக்கறிஞர் உருவாக்கிய மனு முழுவதும் பொய்யாக இருந்தது.
*****
தண்ணீர்! தண்ணீர்!
            தண்ணீர் லாரி வந்து விட்டதென்று நான்கைந்து குடங்களோடு அடித்துப் பிடித்து ஓடினாள் மினரல் வாட்டர் கம்பெனியில் வேலை பார்க்கும் நாகம்மா.
*****
தண்ணிப் பஞ்சம்
            "தட்டுபாடில்லாம தண்ணி விநியோகம் பண்ணுவேன்னு, சொல்லியே கவுன்சிலர் ஆகிடலாம்!" என்று விஷமமாய்ச் சொல்லி கண் சிமிட்டினார் குவார்ட்டர் பாட்டிலை ஆளுக்கொன்றாய் எடுத்துக் கொடுத்த சாரங்கபாணி.
*****

No comments:

Post a Comment

ஞானத்தின் பாட்டு

ஞானத்தின் பாட்டு அவசரப்பட முடியாது நிதானமாகச் செல்ல வேண்டும் பல நேரங்களில் பிடிபடிவதற்குப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் அதிகம்...