29 May 2017

வெள்ளந்தியாக ஒரு கொள்கை பரப்புச் செயலாளர்


வெள்ளந்தியாக ஒரு கொள்கை பரப்புச் செயலாளர்
            அரசியலில் டிரெண்ட் மாறிக் கொண்டிருப்பதை சமத்து சம்புலிங்கம் சமீப காலமாக கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்.
            முன்பெல்லாம் ஒரு பொதுக்கூட்டத்துக்கு இருபது தொண்டர்களைக் கூட்டி வந்தால் கிளைச் செயலாளர் ஆக்கி விடுவார்கள். ஐம்பது தொண்டர்களைக் கூட்டி வந்தால் ஒன்றிய செயலாளர் ஆக்கி விடுவார்கள். ஆயிரம் தொண்டர்கள் என்றால் மாவட்டச் செயலாளரே ஆகி விடலாம்.
            இப்போது அப்படியில்லை, தொண்டர்களை அழைத்து வருவது தனி ஏற்பாடாகி விட்டது. அவர்களுக்கு தலைக்கு ஐநூறும், ஒரு குவார்ட்டரும், ஒரு பிரியாணி பொட்டலமும் கொடுப்பது பொருத்து பதவிகள் தீர்மானமாகின்றன. ஐம்பது தொண்டர்களுக்கு மேற்காணும் செலவைச் செய்ய திராணியிருந்தால் ஒன்றிய செயலாளர் போஸ்ட் தயார். ஆயிரம் தொண்டர்கள் என்றால் மாவட்டச் செயலாளர் என்றாகி விட்டது.
            தான் இருக்கும் நிலையில் இதெல்லாம் சாத்தியமாக என யோசித்துப் பார்த்த சம்புலிங்கம், தலைவரிடம் தன் தகுதிக்கு ஏற்றாற் போல் கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கேட்டார்.
            "அதுக்கு உனக்கு என்ன தகுதி இருக்குலே?" என்றார் தலைவர்.
            "டெய்லி பத்தாவது வட்டம் சார்புல தலைவருக்கு ஆயிரம் லைக்ஸூம், 500 கமெண்டும் போட ஏற்பாடு பண்ணிடறேன்!" என்றார் சம்புலிங்கம் தன் கொள்கையில் சற்றும் மனம் சளைக்காமல் வேதாளத்தோடு போராடும் விக்கிரமாதித்யனைப் போல வெள்ளந்தியாக.
*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...