29 Apr 2017

ஆநிரை அற்றுப் போதல்


ஆநிரை அற்றுப் போதல்
வடக்குத் தெரு, எடத்தெரு,
கீழத்தெரு, மேட்டுத்தெரு என
நான்கு தெருவுக்கும்
லோட்டாவிலும், சொம்பிலும் பால் அளந்து
மோரும், வெண்ணெயும்
வீடு வந்து கேட்போர்க்கெல்லாம்
வள்ளல் போல ஈந்து
இன்று பாலுக்கு ஒரு பசுவுமின்றி
நைந்த வாயில் புடவையும்
வெளுத்துக் கிழந்த ஜாக்கெட்டும் அணிந்து
தெருவில் எங்கேணும்
மாடு ஈந்த சாணி கண்டால்
சிறகிழந்த பறவை போல்
வீழ்ந்து வேலியில் சிக்கிக் கிடக்கும்
பாலிதீன் பையால்
விரைந்தோடி எடுத்துச் செல்வாள்
வாசல் தெளிக்க ஆகும் என்று
எடத்தெரு பேச்சியம்மாள்.
*****

No comments:

Post a Comment

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...