29 Mar 2017

பொம்மையைக் கொன்றவர்கள்


பொம்மையைக் கொன்றவர்கள்
பொம்மையைக் கொன்றவர்கள்
சுதந்திரமாக
உலவிக் கொண்டிருந்தார்கள்
நடு வீட்டுக்குள்.
*****

கவி
கம்பன் வீட்டுக் கட்டுத்தறிக்கு
நிஜம்
பாடத் தெரியவில்லை.
*****

நாகரிகம்
நாலு எழுத்துப் படிச்சா
நாகரிகம் வரும்
என்றார்கள்.
நாலு எழுத்துப் படித்து
ஐந்து இலக்கத்தில்
முதல் மாதச் சம்பளம் வாங்கியவன்
முதல் வேலையாகச் செய்தான்
அப்பனையும், ஆயியையும்
முதியோர் இல்லத்தில் கொண்டு சேர்ப்பதை.
*****

No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...