30 Mar 2017

காற்றின் கோடு


காற்றின் கோடு
காற்றில் கிழித்தக்
கோடாய்
அங்கேயே தங்குகிறது
பார்வையற்ற
பிச்சைக்காரன் இசைக்கும்
புல்லாங்குழல் இசை.
*****

பார்வை
ரத்தம் கக்கிச் செத்தவன்
வெறித்துப்
பார்த்துக் கொண்டு இருந்தான்
அய்யனாரை
தானம் செய்த
கண்கள் இரண்டால்.
*****

நடை
கொம்புள்ள மாடு
தலைசாய்த்து
நடக்கிறது.
*****

No comments:

Post a Comment

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...