28 Feb 2017

காட்சி முடிவு


மனத்தோற்றம்
இடுப்பளவு வந்த வெள்ளம்
மார்பளவாகி
கழுத்தளவைக் கடந்து
‍தலைக்கு மேலே
போன போது
தோன்றியது
வீட்டிலிருந்த பொருள்களைப்
பாதுகாப்பதில்
மனதைச் செலுத்தியிருக்காமல்
தப்பித்திருக்கலாமே என!
*****


காட்சி முடிவு
வில்லனைக் கேட்கும்
சில கேள்விகள்
எங்கள் மீதும் தெறிக்கின்றன.

வில்லனுக்கு விழும்
அடிகளும், உதைகளும்
சில எங்கள் மீதும் விழுகின்றன.

காட்சி முடிந்ததும்
வெளியேறுகிறோம்
நாயகனைப் பாராட்டி விட்டு
வில்லனாய் நடித்தவனின்
நடிப்பைப் புகழ்ந்த படி!
*****

No comments:

Post a Comment

ஞானத்தின் பாட்டு

ஞானத்தின் பாட்டு அவசரப்பட முடியாது நிதானமாகச் செல்ல வேண்டும் பல நேரங்களில் பிடிபடிவதற்குப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் அதிகம்...