31 Jan 2017

பதில் எழுதா கடிதம்


பதில் எழுதா கடிதம்
அநேகமாய்
கடிதங்கள் இப்போது
வருவதில்லை என்பதால்
பதில் எழுதாமல் விட்டு விட்டேன்
காதலிப்பதாய்
வந்த
ஒரு கடிதத்துக்கு!
*****

நினைவுகள்
குஞ்சு பொரித்த
கோழியை நினைவூட்டுகிறது
உன்மத்தமான காதல்!
குட்டிப் போட்ட
பூனையை நினைவூட்டுகிறது
எப்போதாவது
நீ தரும் முத்தம்!
கன்று ஈன்ற மாட்டை
நினைவூட்டுகிறது
பிரியமான
உன் தொடுதல்கள்!
மனிதனைக் கண்டு
சுற்றிச் சுற்றி வரும்
டால்பினைப் போல்
சுற்றி வருகிறது
இந்த முரடனைக் கண்ட
உன் பேரன்பு கொண்ட
பெரும் நேசம்!
*****

1 comment:

  1. குட்டி போட்ட பூனையை நினைவூட்டுகிறது எப்போதாவது நீ தரும் முத்தம் அடடா...

    ReplyDelete

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...